BIBLE QUIZ QUESTION WITH ANSWRE TAMIL
======================
பைபிள் வினா விடைகள்
01. இயேசு கிறிஸ்துவிடம் வந்து: உம்முடைய சீஷர்கள்
முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி நடக்கிறார்கள் என்று சொன்னது யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) வேதபாரகர், பரிசேயர்
C) ஏரோதியர், சாஸ்திரிகள்
Answer: B) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 15: 1,2)
02. வேதபாரகரும், பரிசேயரும் யார் கைகழுவாமல் போஜனம்
பண்ணுகிறார்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள்?
A) இயேசுவின் சீஷர்கள்
B) பிலாத்துவும், ஏரோதுவும்
C) ஆசாரியரும், லேவியரும்
Answer: A) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 15: 2)
03. பாரம்பரியத்தினால் தேவனுடைய கற்பனையை அவமாக்கியது யார்?
A) ஏரோது, பிலாத்து
B) இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள்
C) வேதபாரகர், பரிசேயர்
Answer: C) வேதபாரகர், பரிசேயர்
(மத்தேயு 15: 6)
04. ஜனங்கள் வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று சொன்ன தீர்க்கதரிசி யார்?
A) மீகா
B) ஏசாயா
C) எரேமியா
Answer: B) ஏசாயா
(மத்தேயு 15: 9)
05. யார் நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்?
A) பிதா
B) மனுஷ குமாரன்
C) ஆவியானவர்
Answer: A) பரம பிதா
(மத்தேயு 15: 13)
06. குருடருக்கு வழிகாட்டுகிற குருடர் என்று இயேசு யாரைக் கூறுகிறார்?
A) சீஷர்கள்
B) ஆசாரியர்
C) பரிசேயர்
Answer: C) பரிசேயர்
(மத்தேயு 15: 12-14)
07. இயேசுவிடம் வந்த கானானிய ஸ்திரி குடியிருந்த இடம் எது?
A) கலிலேயா
B) கப்பர்நகூம்
C) தீரு, சீதோன்
Answer: C) தீரு, சீதோன்
(மத்தேயு 15: 21,22)
08. காணாமற்போன ஆடுகள் யார்?
A) யூத மார்க்கத்தார்
B) இஸ்ரவேல் வீட்டார்
C) கானானிய ஜனங்கள்
Answer: B) இஸ்ரவேல் வீட்டார்
(மத்தேயு 15: 24)
09. 'பிள்ளைகளின் அப்பத்தை நாய்குட்டிகளுக்கு போடுகிறது நல்லதல்ல' இந்த வாக்கியம் இயேசு கிறிஸ்து யாரிடம் கூறியது?
A) சீஷர்கள்
B) பரிசேயர்
C) கானானிய ஸ்திரீ
Answer: C) கானானிய ஸ்திரீ
(மத்தேயு 15: 26)
10. 'ஸ்திரியே உன் விசுவாசம் பெரியது' என்று இயேசு கிறிஸ்து யாரிடம் சொன்னார்?
A) மார்த்தாள்
B) மரியாள்
C) கானானிய ஸ்திரீ
Answer: C) கானானிய ஸ்திரீ
(மத்தேயு 15: 28)
11. ஜனங்கள் இயேசுவினிடத்தில் எத்தனை நாள் தங்கியிருந்து, சாப்பிட ஒன்று இல்லாதிருந்தார்கள்?
A) இரண்டு
B) மூன்று
C) நான்கு
Answer: B) மூன்று
(மத்தேயு 15: 32)
12. ஜனங்கள் பந்தியிருந்த இடம் எது?
A) தரை
B) புல்
C) வனாந்தரம்
Answer: A) தரை
(மத்தேயு 15: 35)
13. இயேசு கிறிஸ்து அப்பததையும், மீனையும் ஸ்தோத்திரம் பண்ணி பிட்டு யாரிடம் கொடுத்தார்?
A) பேதுரு
B) சீஷர்கள்
C) ஜனங்கள்
Answer: B) சீஷர்கள்
(மத்தேயு 15: 36)
14. 'ஏழு அப்பம், சில சிறு மீன்கள்' அற்புதத்தில் மீதயான துணிக்கைகளை
எத்தனை கூடை நிறைய எடுது்தார்கள்?
A) ஏழு
B) பன்னிரண்டு
C) பதினைந்து
Answer: A) ஏழு
(மத்தேயு 15: 37)
15. 'ஏழு அப்பம், சில சிறு மீன்கள்' அற்புதத்தில் சாப்பிட்ட புருஷர்கள் எத்தனை பேர்?
A) நாலாயிரம் பேர்
B) ஐயாயிரம் பேர்
C) ஏழாயிரம் பேர்
Answer: A) நாலாயிரம் பேர்
(மத்தேயு 15: 38)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.