மத்தேயு சுவிசேஷம் அதிகாரம் பனிரெண்டு (12)
வேதாகம் வினா விடைகள்
MATTHEW BIBLE QUIZ CHAPTER 12
=======================
01. இயேசு பயிர் வழியே நடந்து போன நாள் எந்த நாள்?
A) ஓய்வு நாள்
B) பரிசுத்த நாள்
C) ஆயத்த நாள்
Answer: A) ஓய்வு நாள்
(மத்தேயு 12: 1)
02. கதிர்களை கொய்து தின்னத் தொடங்கியது யார்?
A) இயேசு கிறிஸ்து
B) இயேசுவின் சீஷர்கள்
C) பரிசேயர்கள்
Answer: B) இயேசுவின் சீஷர்கள்
(மத்தேயு 12: 1)
03. ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத
தேவசமுகத்து அப்பங்களைப் புசித்தது யார்?
A) மோசேயும், ஆரோனும்
B) எலிசாவும், எலியாவும்
C) தாவீதும், அவனோடிருந்தவர்களும்
Answer: C) தாவீதும், அவனோடிருந்தவர்களும்
(மத்தேயு 12: 4)
04. ஓய்வு நாளில் யார் வேலை செய்தால் குற்றமில்லை?
A) ஆசாரியர்கள்
B) வேதபாரகர்கள்
C) சதுசேயர்கள்
Answer: A) ஆசாரியர்கள்
(மத்தேயு 12: 5)
05. ஓய்வு நாளுக்கும் ஆண்டவராயிருப்பது யார்?
A) தேவன்
B) மனுஷ குமாரன்
C) பரிசுத்த ஆவி
Answer: B) மனுஷ குமாரன்
(மத்தேயு 12: 8)
06. இயேசுவை கொலை செய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஆலோசனை பண்ணியது யார்?
A) பரிசேயர்
B) சதுசேயர்
C) வேதபாரகர்
Answer: A) பரிசேயர்
(மத்தேயு 12: 14)
07. குருடும் ஊமையுமான மனிதன் யார்?
A) முடவன்
B) பிசாசு பிடித்தவன்
C) சூம்பின கை உடையவன்
Answer: B) பிசாசு பிடித்தவன்
(மத்தேயு 12: 22)
08. ”இவன் பெயல்செபூலினாலே பிசாசுகளைத்
துரத்துகிறானேயல்லாமல் மற்றபடியல்ல” இவ்வாக்கியம் யார்? யாரிடம் சொன்னது?
A) பரிசேயர் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது
B) ஆசாரியர்கள் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது
C) வேதபாரகர்கள் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது
Answer: A) பரிசேயர் – இயேசு கிறிஸ்துவிடம் சொன்னது
(மத்தேயு 12: 24)
09. யாருக்கு விரோதமான தூஷணம் மனுஷனுக்கு மன்னிக்கப்படாது?
A) ஊழியர்களுக்கு விரோமான தூஷணம்
B) ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்
C) அதிகாரிகளுக்கு விரோதமான தூஷணம்
Answer: B) ஆவியானவருக்கு விரோதமான தூஷணம்
(மத்தேயு 12: 31)
10. நம்மை நீதிமான் அல்லது குற்றவாளி என்று தீர்ப்பது எது?
A) நம்முடைய செயல்கள்
B) நம்முடைய ஆடை அணிகலன்கள்
C) நம்முடைய வார்த்தைகள்
Answer: C) நம்முடைய வார்த்தைகள்
(மத்தேயு 12: 37)
11. வேதபாரகர், பரிசேயருக்கு இயேசு காட்டிய அடையாளம் என்ன?
A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
B) மல்கியா தீர்க்கதரிசியின் அடையாளம்
C) ஏசாயா தீர்க்கதரிசியின் அடையாளம்
Answer: A) யோனா தீர்க்கதரிசியின் அடையாளம்
(மத்தேயு 12: 38,39)
12. இரவும் பகலும் மூன்று நாள் மீனின் வயிற்றில் இருந்தது யார்?
A) யோனா
B) சிம்சோன்
C) கிதியோன்
Answer: A) யோனா
(மத்தேயு 12: 40)
13. இரவும் பகலும் மூன்று நாள் பூமியின் இருதயத்தில் இருந்தது யார்?
A) லாசரு
B) ஸ்தேவான்
C) மனுஷ குமாரன்
Answer: C) மனுஷ குமாரன்
(மத்தேயு 12: 40)
14. யோனாவின் பிரசங்கத்தால் மனம் திரும்பிய பட்டணம் எது?
A) நினிவே
B) சோதோம்
C) பெத்சாய்தா
Answer: A) நினிவே
(மத்தேயு 12: 41)
15. தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து யாரைப் பார்க்க வந்தாள்?
A) சவுல்
B) தாவீது
C) சாலமோன்
Answer: C) சாலமோன்
(மத்தேயு 12: 42)
இந்த தலத்தை பார்த்தமைக்கு நன்றி. உங்கள் கருத்துக்களை பதிவிடவும்.