Type Here to Get Search Results !

Luke 7 | Bible Quiz Question With Answer | லூக்கா சுவிசேஷம் 7 வேதாகம வினா விடைகள் தொகுப்பு | Jesus Sam

==================
லூக்கா ஏழாம் அதிகாரம் (7) கேள்வி பதில்கள்
LUKE Chapter Seven (7) Bible Quiz in Tamil
==================

01. இயேசு வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி நூற்றுக்கு அதிபதி இயேசுவிடம் யாரை அனுப்பினான்?
A) யூதருடைய மூப்பர்
B) வேலைக்காரர்
C) ஊழியக்காரன்
Answer: A) யூதருடைய மூப்பர்
    (லூக்கா 7:2,3)

02. யூதர்களுக்காக நூற்றுக்கு அதிபதி கட்டியது எது?
A) தேவாலயம்
B) ஜெபஆலயம்
C) ஜெபகூடாரம்
Answer: B) ஜெபஆலயம்
    (லூக்கா 7:5)

03. ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும் அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான் என்றது யார்?
A) பரிசேயன்
B) ஜெப ஆலய தலைவன்
C) நூற்றுக்கு அதிபதி
Answer: C) நூற்றுக்கு அதிபதி
    (லூக்கா 7:7)

04. இயேசு விதவையின் மகனை உயிரோடே எழுப்பிய ஊர் எது?
A) நாயீன்
B) நாசரேத்
C) சரெப்தா
Answer: A) நாயீன்
    (லூக்கா 7:11,14)

05. வருகிறவர் நீர் தானா? அல்லது வேறொரவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று கேட்டது யார்?
A) சிமியோன்
B) யோவான்
C) சீமோன் பேதுரு
Answer: B) யோவான்
    (லூக்கா 7:19)

06. அலங்கார வஸ்திரம் தரித்து செல்வமாய் வாழ்கிறவர்கள் எங்கு காணப்படுகிறார்கள்?
A) பரலோகம்
B) அரசர் மாளிகை
C) தேவாலயம்
Answer: B) அரசர் மாளிகை
    (லூக்கா 7:25)

07. தீர்க்கதரிசியிலும் மேன்மையுள்ளவன் என்று இயேசு யாரைக் குறிப்பிடுகிறார்?
A) சிமியோன்
B) யோவான்ஸ்நானகன்
C) சீஷர்கள்
Answer: B) யோவான்ஸ்நானகன்
    (லூக்கா 7:26)

08. ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யாரைப் பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை?
A) ஏசாயா
B) யோவான்ஸ்நானன்
C) தானியேல்
Answer: B) யோவான்ஸ்நானன்
    (லூக்கா 7:28)

09. யாருடைய உபதேசத்தைக் கேட்டு தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்?
A) இயேசு
B) யோவான்
C) அப்போஸ்தலர்
Answer: B) யோவான்
    (லூக்கா 7:29)

10. தங்களுக்கு கேடுண்டாக தேவனுடைய ஆலோசனையை தள்ளிவிட்டவர்கள் யார்?
A) பரிசேயர், சதுசேயர்
B) நியாயசாஸ்திரி, சதுசேயர்
C) பரிசேயர், நியாயசாஸ்திரி
Answer: A) பரிசேயர், சதுசேயர்
    (லூக்கா 7:30)

11. யாரை பிசாசு பிடித்தவன் என்றார்கள்?
A) தாவீது
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: B) யோவான்ஸ்நானன்
    (லூக்கா 7:33)

12. ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்று யாரை சொன்னார்கள்?
A) எலியா
B) யோவான்ஸ்நானன்
C) மனுஷகுமாரன்
Answer: C) மனுஷகுமாரன்
    (லூக்கா 7:34)

13. எது அதன் பிள்ளைகள் எல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படுகிறது?
A) புத்தி
B) செல்வம்
C) ஞானம்
Answer: C) ஞானம்
    (லூக்கா 7:35)

14. இயேசுவை தன்னோடே போஜனம்பண்ண வேண்டும் என்று வேண்டிக்கொண்ட பரிசேயன் பெயர் என்ன?
A) சகேயு
B) சிமியோன்
C) சீமோன்
Answer: C) சீமோன்
    (லூக்கா 7:36,39,40)

15. இயேசு யாருடைய வீட்டில் இருந்த போது பாவியான ஸ்திரீ இயேசுவின் பாதத்தில் பரிமளதைலம் பூசினாள்?
A) மாற்கு
B) யோவான்
C) பரிசேயன்
Answer: C) பரிசேயன்
    (லூக்கா 7:37,38)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.